வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 டிசம்பர், 2020

திருக்குறள் - 109. அதிகாரம் - தகையணங்குறுதல்

 


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. -1081

நோக்கினால் என் மனம் மயங்குகிறது தெய்வமகளா? மயிலா? பெண்ணா? 

நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து. - 1082

அவள் பார்வையே அணங்கு பெரும்படை கொண்டு தாக்குதல் போன்றது

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையான் பேரமர்க் கட்டு. - 1083

இளம்பெண்ணின் பார்வையே எமனைப் போன்றது    

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண். - 1084

இளம்பெண்ணின் பார்வையே கொல்லும் அளவு கொடியது

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து. - 1085

இளம்பெண்ணின் பார்வை எமனோ, கண்ணோ மானோ என மயக்கும்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.-1086

இவளின் வளைந்த புருவம் நேராக இருந்தால், கண்களால் துன்பமில்லை

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில். - 1087

பெண்ணின் மேலாடை, யானையின் முகபடாம் போன்றது

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு. - 1088

எதிரிகளும் அஞ்சும் என்வலிமை, இவளது நெற்றியழகிற்கே மயங்கும்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ எதில தந்து. -1089

நாணமும், மானுருவமும் உடையவளுக்கு வேறென்ன அணிவேண்டும்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று. -1090

உண்டால்தான் மயக்கம் தரும் கள், கண்டாலே மயக்கும் காமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக