வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 16 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 116. பிரிவாற்றாமை


 

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை. - 1151

செல்லாவிட்டால் என்னிடம் கூறு, பிரிவதென்றால் வாழ்பவரிடம் கூறு

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு. - 1152

அவருடன் சேர்ந்திருந்தாலும் பிரிவாரே என்ற அச்சமே மிகுகிறது     

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.- 1153

பிரியேன் என்ற சொல்லை நம்பாதே! அறிவுடையாருக்கும் பிரிவுண்டு

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு. - 1154

பிரியமாட்டேன் என்றவர் பிரிந்தால், நம்பியவர் மேல் என்ன தவறு?  

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு. - 1155

காதலர் பிரிந்தால் பின்னர் சேருவது கடினம்

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.- 1156

பிரிவைத் தெரிவிக்கும் கல்நெஞ்சமுடையவர் பின் சேருவது கடினம் 

துறைவன் துறந்தமை தூற்றகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை. - 1157

தலைவனின் பிரிவை, கழன்றுவிழும் என் முன்கை வளையே காட்டும்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்         

இன்னாது இனியாரப் பிரிவு. -1158

உறவினர் பிரிவைவிட, காதலர் பிரிவு கொடுமையானது

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ. - 1159

தொட்டால்தான் சுடும் தீ, நீங்கினாலே சுடும் காமம்

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர். -1160

பிரிவுத்துயரைப் பொறுத்து வாழ்பவர் பலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக