வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 5 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 106 இரவு

 


இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று. -1051

வள்ளல்களிடம் கேட்பது பழியில்லை, இல்லை என்பதே அவருக்குப் பழி

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின். -1052.

வழங்குபவர் மகிழ்ந்து தந்தால் பெறுபவர்க்கு, பிச்சைகூட இன்பமாகும்

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ஏஎர் உடைத்து.-1053

திறந்த மனதும், கடமையுமறிந்தவரிடம் பிச்சை கேட்பதுகூட அழகாகும்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.-1054

கனவிலும் மறைத்தறியாதவரிடம் பிச்சை பெறுவதும் ஈகை போன்றதே

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.-1055

வழங்கும் பண்புடையவர்களால்தான் இரப்போர் வாழ்கின்றனர்

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.-1056

பொருளை மறைக்காத வள்ளல்களைக் கண்டால் வறுமை மறையும்

இகழ்ந்தௌfளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.- 1057

இகழாமல் வழங்குவோரைக் கண்டால் உள்ளம் மகிழ்வதே இயல்பு

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாரை சென்றுவந் தற்று.-1058

இரந்து வாழ்வோர் இல்லாவிட்டால் மரப்பாவை போன்றது உலகம்

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.-1059

பெறுபவரால்தான் வழங்குபவர் புகழ் பெறுகிறார்

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.-1060

வறுமையின் நிலை உணர்ந்து கேட்பவன் கோபப்படக்கூடாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக