வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 119. பசப்பு பருவரல்


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற. - 1181

காதலரின் பிரிவை ஏற்றேன். இப்பசலையை யாரிடம் கூறுவேன்      

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.- 1182

காதலர் தந்தார் என்ற உரிமையுடன் என் உடல் பரவுகிறது பசலை

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து. - 1183

அழகும், நாணமும் கொண்டு அவர், காமமும், பசலையும் தந்தார்     

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு. -1184

அவரைப்பற்றியே பேசுகிறேன், நினைக்கிறேன், இருந்தும் வந்தது பசலை

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது. - 1185

அதோ! காதலர் என்னைப் பிரிகிறார், இதோ! என்மேல் படர்கிறது பசலை

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயற்கற்றம் பாரக்கும் பசப்பு. -1186

விளக்கில்லா இடத்தில் இருள் போல, அவரில்லா இடத்துப்படரும் பசலை

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு. -1187

அவரைத் தழுவிப் பிரிந்தேன், உடனே விரைந்து பரவியதே பசலை

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல். -1188

பசலை கொண்டாள் என்பார் உண்டு! பசலை தந்தார் என்பார்

இல்லை பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின். -1189

காதலர் நலமுடனிருப்பாரென்றால் இப்பசலை இப்படியே இருக்கட்டும் 

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின். -1190

காதலரை ஊரார் திட்டாவிட்டால், பசலையும் மகிழ்ச்சி தருவதுதான்  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக