வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 17 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 117. படர் மெலிந்திரங்கல்


 

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும். - 1161

இறைக்க இறைக்க நீர் ஊரும், மறைக்க மறைக்க காதல் பெருகும்    

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும். - 1162

இக்காதல் நோயை மறைக்கவோ, அவரிடம் உரைக்கவோ முடியாது   

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து. - 1163

காமமும், நாணமும் என் உடலையும், உயிரையும் வருத்தும்

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல். - 1164

காமம் என்ற கடலைக் கடக்க காதலன் என்ற படகுதான் இல்லை

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர். - 1165

நட்பிலே துன்பம் தருபவர், பகையில் என்ன செய்வாரோ

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது. - 1166

காமம் கடல் போன்றது, அதுதரும் துன்பமோ கடலைவிடப் பெரியது   

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன். - 1167

நள்ளிரவிலும் காம வெள்ளத்தில் நீந்தி கரையைக் காணவில்லை      

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை. - 1168

யாவரும் தூங்க இந்த இரவுக்கு நான் மட்டுமே துணையானேன்

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா. - 1169

காதலரின் பிரிவுத்துயரை விட, இந்த நீண்ட இரவு கொடுமையானது

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண். - 1170

என் உள்ளத்தைப் போல், கண்களும் அவருடனிருந்தால் அழமாட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக