வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 122. கனவு நிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து. - 1211

காதலர் அனுப்பிய தூதினைக் கொண்டு வந்த கனவுக்கு நன்றி         

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.-1212

கண்கள் உறங்கினால் கனவில், என் துயரை காதலரிடம் சொல்வேன் 

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.- 1213

கனவிலாவது காதலரைக் காண்பதால்தான் இன்னும் உயிர் வாழ்கிறேன்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு. - 1214

நனவில் நடக்கா இன்ப நிகழ்வுகள் கனவிலே நடக்கின்றன            

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.- 1215

நனவைப் போலவே கனவிலும் காதலரைக் காண்பது இன்பமே       

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன். - 1216

விழிப்பு இல்லையென்றால் காதலர் என்னைவிட்டு நீங்காதிருப்பார்   

நனவினால் நல்காக் கொடியார் கனவனான்

எனஎம்மைப் பீழப் பது? - 1217

நேரில் வராத கொடியவர், கனவில் வந்தென்னை வருத்துவது ஏன்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.- 1218

கனவில் தோள் மீது இருந்த காதலர் நனவில் நெஞ்சில் உள்ளார்    

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர். - 1219

கனவில் காதலரைக் காணாதவரே நனவில் புலம்புவர்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர். - 1220

கனவில் நான் காணும் காதலரை இந்த ஊரார் கண்டதில்லையோ 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக