வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 124. உறுப்பு நலன் அழிதல்


 

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண். - 1231

பிரிந்து சென்ற காதலரை எண்ணி வருந்திய என் கண்கள் அழகிழந்தன

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண். - 1232

காதலரின் அன்பின்மையை, என் பசலையும், அழும் கண்களும் கூறும்  

தணந்தாமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள். - 1233

அவரைக் கூடிப்பருத்த தோள்கள், பிரிவால் வாடி, துயரின் சாட்சியாகும்

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்  

தொல்கவின் வாடிய தோள். - 1234

பிரிவால், தோள்கள் வாடி, வளையல்கள் கழன்று விழும்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள். - 1235

காதலரின் கொடுமையை என் தோள் நலிவைப் பார்த்தே அறியலாம்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து.-1236

பசலையைவிடக் கொடியது காதலர் கொடியவர் என்ற சொல்லே     

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.- 1237

நெஞ்சே என் தோள்மெலிவை அவரிடம் கூறிப் பெருமைப்படுவாயோ

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல். - 1238

தழுவலைத் தளர்த்தியதும்  பேதை  நெற்றியில் படர்ந்தது பசலை

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண். - 1239

தழுவலுக்கிடையே காற்று புகினும், பசலை கொள்கிறாள் இப்பேதை   

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு. - 1230

பிரிவால் வாடிய நெற்றியைக் கண்டு, கண்களும் பசலையடைந்தன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக