வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 126. நிறையழிதல்

 


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.- 1251

காமம், கோடரியாக மாறி, நாணத்தாழிட்ட மனஅடக்கத்தை வீழ்த்தும் 

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில். - 1252

இரக்கமற்ற காமம் நள்ளிரவிலும் என்னை ஆள்கிறது     

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும். - 1253

தும்மலைப் போன்றது இக்காதல் எப்படி மறைத்தாலும் வெளிப்படும்   

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும். - 1254

அடங்கியிருந்த காமம், தற்போது அடங்கமறுத்துத் பொதுவில்தோன்றும்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று. - 1255

பிரிந்த காதலர்பின் செல்லாத தன்மானம் காதலுற்றவா்களுக்கு இல்லை

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர். - 1256

விரும்பாதவா் பின் செல்வதால் காமம்நோய் கொடியது

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின். - 1257

காமத்தால் நாணத்தை மறக்கிறேன்

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை. - 1258

பலமாயம் செய்யும், காதலரின் அன்புமொழியே பெண்மையை அழிக்கும்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.-1259

சண்டையிடச் சென்றவள், நெஞ்சம் அவருடன் கலந்ததால் தழுவினேன்

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ  

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.- 1260

கொழுப்பை தீயிலிட்டாரன்ன நெஞ்சுடையார் கூடி பின் ஊட முடியுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக