வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 24 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 121. நினைத்தவர் புலம்பல்

 

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது. - 1201

குடித்தால்தான் மகிழ்ச்சிதரும் கள்! நினைத்தாலே மகிழ்ச்சிதரும் காமம்

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொனறு இல். -1202

பிரிவில் நினைத்தாலும் இனிமை தருவதால் காமமே இனிது         

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும். -1203

எமை நினைக்கிறாரா? இல்லையா? தும்பல் வருவது போல் மறைகிறதே

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர். - 1204

அவர் இங்கு நலமே! நான் அங்கு நலமா?

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்  

எம்நெஞ்சத்து ஓவா வரல். - 1205

என்னை நினைக்காதவர், என் மனதில் மட்டும் ஓயாது வருவது ஏனோ

மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடு இயான்

உற்றநாள் உள்ள உளேன். - 1206

அவரோடு இருந்த நாளை நினைப்பதால் தான் வாழ்கிறேன்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.-1207

அவரை மறக்க நினைத்தாலே மனம்வாடும்! நினைக்க மறந்தால்?    

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு. - 1208

அவரை எவ்வளவு நினைத்தாலும் அதற்காக கோபப்படமாட்டார்      

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து. - 1209

நாம் இருவரல்ல ஒருவரென்றவர் இன்று மறந்ததால் வருந்தும் உயிர்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி. - 1210

நீங்காமலிருந்து நீங்கியவரைக் காணும்வரை நிலவே நீ துணையாயிரு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக