வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 111. புணர்ச்சி மகிழ்தல்

 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள. -1101

ஐம்புலன் இன்பங்களும் வளையணிந்த பெண்களிடமே உள்ளன

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து. -1102

நோய்க்கு மருந்துகள் பல, ஆனால் காதல்நோய்க்கு காதலியே மருந்து

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.-1103

சொர்க்க இன்பம், பெண் இன்பத்தைவிடப் பெரிதா?

நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.-1104

நீங்கினால் சுடும்! சேர்ந்தால் குளிரும்! இத்தீயை எங்கு பெற்றாள் இவள் 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.-1105

விரும்பிய பொருள் தரும் இன்பம்போன்றது, இவளின் தோளின்பம்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.-1106

உயிர் தளிர்ப்ப தழுவுவதால் இவள் தோள்கள் அமிழ்தம் போன்றன     

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு. -1107

உழைத்து ஈட்டிய பொருளை பகுத்துண்பது போன்றதே பெண்ணின்பம்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.- 1108

காற்றும் நுழையாதபடி இறுகித் தழுவுதல் காதலர், இருவர்க்கும் இனிதே

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.-1109

ஊடிய பின் உணர்தல், அதன்பின் கூடுதலே காதலர் பெற்றபயன்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.-1110

அறிய அறிய அறியாமை கூடும்! இவளைக் கூடகூட இன்பம் கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக