வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 12 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 112. நலம் புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள். -1111

அனிச்ச மலரே உன்னைவிட மென்மையானவள் என் காதலி       

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று. -1112

என் நெஞ்சே! அவள் கண்களைக் கண்டு மலர் என ஏன் மயங்குகிறாய்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.-1113

தளிருடல், முத்துப்பல், இயற்கை மணம், வேல்விழி, மூங்கிற் தோளாள்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.- 1114

இவள் கண்களைக்கண்டு குவளை மலர்களும் ஒவ்வேம் என நாணும்

அனிச்சப்பூக் கால்களையான் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை. - 1115

அனிச்ச மலரின் காம்பைக் கூட தாங்காத மெல்லிடையாள் அவள்   

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன். - 1116

இவள் முகம் எது? நிலவு எது? என அறியாது விண்மீன்கள் மயங்கும்  

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து. - 1117

நிலவுக்கும் களங்கம் உண்டு! இவள் முகத்துக்கு ஏதும் இல்லை

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி. - 1118

நிலவே! இவள் முகம்போல ஒளி வீசுவாயானால் யாவரும் விரும்புவர்

மலரன்ன கண்ணான் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி. - 1119

நிலவே! நீ அவள் போலிருக்க விரும்பினால் பலர்காண தோன்றாதே  

அனிச்சமும் அன்னத்தின் தூவியம் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம். - 1120

அனிச்சமும், அன்னத்தின் இறகும் இவளடிக்கு நெருஞ்சிப் பழம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக