வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 114. நாணுத் துறவுரைத்தல்

 


காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.- 1131

காதல் நிறைவேறாதவர்களுக்கு மடலன்றி வேறு துணையில்லை   

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து. - 1132

அவள் பிரிவைத் தாங்காது, வெட்கத்தைவிட்டு மடலேறத் துணிந்தேன்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல். - 1133

காமம் வந்தால் நாணமும், நல்லாண்மையும் நீங்கிவிடும்            

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை. -  1134

நாணம், நல்லாண்மை என்ற படகுகளை காமவெள்ளம் அழித்துவிடும்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.  1135

மடலும், மாலை மயக்கமும் தந்தாள் அவள்

மடலுர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண். - 1136

அவள் பிரிவால் இரவிலும் மடலூர்தலை நினைக்கிறேன் 

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில். - 1137

கடலளவு காமத்திலும் மடலேறாத பெண்னின் பெருமைக்கு நிகரேது  

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும். - 1138

நெஞ்சுறுதி இல்லாதார் காமம் ஊரறிய வெளிப்படும்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு. - 1139

பலரும் அறியவில்லை என்றெண்ணி பொதுவில் வெளிப்படும் காமம் 

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு. - 1140

காமத்தின் துயர் அறியாதவர்கள், காமவயப்பட்டாரைக் கண்டு நகைப்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக