வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 108. கயமை

 


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில். - 1071

கயவருக்கென தனிஉருவமில்லை! மனிதரைப் போன்றதே அந்தஉருவம்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர். -1072

கவலை இல்லாமையால்,நல்லோரைவிட கயவர்களே மகிழ்வானவர்கள்

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். - 1073

தாம் விரும்பியபடி வாழ்வதால் கயவரும் தேவர் போன்றவர்

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். - 1074

தம்மைவிட கீழானவரைக்கண்டு தாம் சிறந்தோர் என நினைப்பர் கயவர்

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது. - 1075

தண்டனைக்கும், புகழுக்காகவும் மட்டுமே கயவர் ஒழுங்காக இருப்பார்

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். - 1076

இரகசியங்களை பிறரிடம் சொல்வதால் கயவர், பறைபோன்றவர்

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.-1077

கயவர் தம்மை அடிப்பவரைத்தவிர பிறருக்கு எவ்வுதவியும் செய்யார்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ். - 1078

கரும்பு போல அழிந்தே பயன்படுவர் கயவர். நல்லோருக்கு ஒரேசொல்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.- 1079

பிறர் உண்பதையும், உடுப்பதையும் பார்த்தே பொறாமைப்படுவர் கயவர்

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து. - 1080

கயவரின் தகுதி தெரியுமா? துன்பத்தில் தன்னையே விற்பதே அவர் தகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக