வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 23 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 120. தனிப்படர் மிகுதி

 

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி. - 1191

விரும்பியவர் விரும்பினால் அக்காதல் விதையில்லா பழம் போன்றது

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி. - 1192

விரும்பியவர் மீது பொழியும் அன்பானது, மழை பொழிவது போன்றது

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு. -1193

விரும்பியவர் பிரிந்தாலும் சேர்வோம் என்ற செருக்குடன் வாழ்வர் 

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின். - 1194

ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்வதே நல்வாழ்வு

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை. - 1195

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்காவிட்டால், அவரால் பயனில்லை

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது. - 1196

ஒருதலைக் காதல் துன்பம், காவடி போன்ற இருதலைக் காதலே இன்பம்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான். - 1197

காமன் ஆண்கள் பக்கமே இருந்து பெண்கள் மீது போர் தொடுக்கிறான் 

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல். - 1198

காதலரின் இன்சொல்லின்றி பிரிந்து உயிர்வாழ்வோரே கல் நெஞ்சத்தவர்

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு. - 1199

காதலர் விரும்பாவிட்டாலும், அவரது புகழைக் கேட்பது இன்பம் செவிக்கு

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅய் வாழிய நெஞ்சு. - 1200

கல்நெஞ்சத்தவரிடம் துன்பம் கூறுவதைவிட, கடலை தூர்ப்பது எளிது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக