வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

திருக்குறள் அதிகாரம் - 2. வான் சிறப்பு

 


வானின்று உலகம் வழங்கி வருதலால்    
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11

வானம், மண்ணுக்கு வழங்கும் அமுதமே மழை  

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. - 12

உணவாகவும், உணவிற்கு அடிப்படையாவதும் மழையே

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. -13

வான் மழை பொய்த்துவிட்டால், உயிர்கள் பசியால் வாடும்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் 
வாரி வளங்குன்றிக் கால் - 14

மழை இல்லாவிட்டால் உழவும் இல்லை 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -15

வாழ்வுக்கும், தாழ்வுக்கும் மழையே முதன்மையாகிறது

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -
16

மழையின்றி, மண்ணில் பசும்புல்லைக்கூட காணமுடியாது

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.-17

மழை இல்லையென்றால் நெடுங்கடலும் வற்றிவிடும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. - 18

மழை பொழியாவிட்டால், வானோர்க்கு பூசைகள் கிடையாது

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். -19

தானம், தவம் இரண்டுக்கும் மழைவேண்டும்   

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. - 20

நீர் இன்றி இவ்வுலகமும், இவ்வுலகில் ஒழுக்கமும் இல்லை 

1 கருத்து: