வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 50. இடன் அறிதல்

 5


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.- 491

எந்த செயலையும் முடிவை அறிந்த பின் தொடங்கு

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.- 492

வலிமையாளருக்கும் பாதுகாப்பான இடம் முதன்மையானது

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.- 493

இடனறிந்து செயல்பட்டால் வெல்லாதவரும் வெல்வர்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.- 494

தக்க இடமறிந்து தாக்கினால் எதிரிகள் தோல்வியடைவர்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.- 495

முதலையின் வலிமையும் அது வாழும் இடம் சார்ந்தே அமையும்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.- 496

தேர் கடலில் ஓடாது, படகு நிலத்தில் செல்லாது

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தான் செயின்.- 497

இடமறிந்து செய்பவர் எதற்கும் அஞ்சவேண்டாம்

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.- 498

சிறுபடையும் இடமறிந்து போரிட்டால், பெரும்படையை வெல்லும்

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.- 499

சொந்தமண்ணில் யாரையும் வெல்வது அரிது

காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா

வேலான் முகத்த களிறு. - 500

வலிய யானை சேற்றில் சிக்கினால், நரிகூட அதைக் கொல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக