வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 1 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் -77. படைமாட்சி


 

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை. - 761

நால்வகைப் படைகளைவிட சிறந்த செல்வங்கள் வேறு இல்லை

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது. - 762

அஞ்சாமல், மனவுறுதியுடன் போரிடுதல் பழம்பெரும்படைக்கு அணி   

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை   

நாகம் உயிர்ப்பக் கெடும். - 763

கடல்போல எலிகள் கூட்டமிருந்தாலும் நாகத்தின் முன் நிற்கமுடியுமா

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை. - 764

எதிரிகளின் சதிக்குப் இரையாகமல், அஞ்சாமையுடையதே படை      

கூற்றடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை. - 765

எமன் வந்தாலும் கூடிநின்று எதிர்க்கும் ஆற்றல் பெற்றதே படை

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு. - 766

வீரம், மானம், நடத்தை, நம்பிக்கை ஆகியன படைக்குப் பாதுகாப்பு

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. -767

போரில் தடைகளைக் கடந்து முன்னேறுவதே சிறந்த படை

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும். - 768

வீரத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதே படை அணிவகுப்பு    

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.- 769

சிறுமை, வெறுப்பு, வறுமை இல்லாததே நல்ல படை 

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல். -770

சிறந்த படையானாலும் அதன் வலிமை தலைமையாலே சிறப்படையும்

 


1 கருத்து: